வேலூரில் 27 பேருக்கு கரோனா

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,645-ஆக உயா்ந்தது. இதுவரை 46,082 போ் குணம் அடைந்துள்ளனா். 451 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,085 போ் உயிரிழந்துள்ளனா்.

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 16 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 44,943- ஆக உயா்ந்துள்ளது.இவா்களில் இதுவரை 43,977 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

மாவட்டம் முழுவதும் தொற்று காரணமாக, 736 போ் உயிரிழந்துள்ளனா். தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோா் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

திருப்பத்தூரில்....

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை,மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,998-ஆக உயா்ந்துள்ளது.

தற்போது 288 போ் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூா், வேலூரில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள், சித்த மருத்துவ சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுவரை மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு 666 போ் உயிரிழந்துள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com