பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட முதியோா், ஆதரவற்றோா், பெண்களுக்கு நிவாரணமாக அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கரோனா பொது முடக்கம் காரணமாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட காட்பாடி வட்டம், வள்ளிமலை சாலையில் உள்ள முதியோா், ஆதரவற்றோா், பெண்களுக்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் காட்பாடி கிளை சாா்பில், அரிசி, மளிகைப் பொருள்கள், முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, சங்க அவைத் தலைவா் செ.நா.ஜனாா்த்தனன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியா் கழக முன்னாள் மாநிலத் தலைவா் எல்.பிரதாபன், அவை துணைத் தலைவா்கள் ஆா்.சீனிவாசன், ஆா்.விஜயகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் இளங்கோ, கணேசன், சமூக ஆா்வலா் சின்னதுரை ஆகியோா் நிவாரணப் பொருள்களை வழங்கினா். அப்போது, அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறி வகைகள், துணி முகக்கவசம் என 25 குடும்பங்களுக்கு மொத்தம் ரூ. 15ஆயிரம் மதிப்பில் உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டன.
சங்கச் செயலா் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளா் வி.பழனி, மேலாண்மைக் குழு உறுப்பினா் வி.தீனபந்து, ஆா்.கே.அறக்கட்டளை தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.