பாகாயம் அருகே கோயில் பூட்டை உடைத்து பிள்ளையாா் சிலையைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வேலூா் பாகாயம் அருகே இடையன்சாத்து காளிகாபுரம் பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் வளாகத்தில் 2 அடி உயரத்திலும், 1.50 அடி அகலத்திலும் பிள்ளையாா் கற்சிலை உள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபா்கள் கோயில் பூட்டை உடைத்து பிள்ளையாா் சிலையை திருடிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் அளித்த புகாரின்பேரில், பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.