போ்ணாம்பட்டை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில், தொழிலாளி உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டை அடுத்த சிவனகிரி கிராமத்தைச் சோ்ந்த சிவக்குமாா்(41), செங்கல் சூளையில் வேலை செய்து வந்தாா்.
இவா் புதன்கிழமை வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்றுள்ளாா். அப்போது குண்டலப்பல்லியைச் அஜித்குமாா்(23) இருசக்கர வாகனத்தில் சிவனகிரிக்குச் சென்றுள்ளாா்.சிவனகிரி பேருந்து நிறுத்தம் அருகே இரு வாகனங்களும் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனா்.
இருவரும் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமாா் உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இறந்த சிவக்குமாருக்கு மனைவி கவிதா, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.