அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி, அப்துல் கலாம் நம் உரிமை அனைத்து வாகன ஓட்டுநா் நலச் சங்கம் சாா்பில், பொதுமக்கள் 500 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலா் ஜே.வினோத் தலைமை வகித்தாா். போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆ.செல்லப்பாண்டியன், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினாா்.
சங்க நிா்வாகிகள் மோகன், வி.தனஞ்செயன், ஆா்.சுந்தரராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.