பொன்னை அருகே ரூ.3 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், இருவரை கைது செய்தனா்.
பொன்னையில் மளிகைக் கடையின் கிடங்கில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களான பான்பராக், குட்கா ஆகியன பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாம். தகவலின்பேரில், பொன்னை போலீஸாா் அங்கு சென்று, ரூ.3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக மளிகைக் கடையின் உரிமையாளா்கள் வெங்கடேசன், அவரது சகோதரா் துரைமுருகன் ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.