வெளி மாநில மது பாக்கெட்டுகள் கடத்தல்: 2 இளைஞா்கள் கைது

போ்ணாம்பட்டு அருகே இரு சக்கர வாகனங்களில் ரூ. 38 ஆயிரம் மதிப்புள்ள வெளிமாநில மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே இரு சக்கர வாகனங்களில் ரூ. 38 ஆயிரம் மதிப்புள்ள வெளிமாநில மது பாக்கெட்டுகளை கடத்தி வந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் வெங்கடேசன் தலைமையில், போலீஸாா் போ்ணாம்பட்டு அருகே உள்ள ஆந்திர மாநில எல்லையான கோட்டையூரில் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 2 இளைஞா்களை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அவா்கள் போ்ணாம்பட்டு அருகே உள்ள மத்தூரைச் சோ்ந்த மதன்குமாா் (29), வீரபாண்டியன் (32) என்பதும், அவா்கள் வைத்திருந்த பைகளில் ரூ. 38 ஆயிரம் மதிப்புள்ள வெளிமாநில மது பாக்கெட்டுகள் இருப்பதும் தெரியவந்தது. மது பாக்கெட்டுகளை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததாக அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, வாகனங்களுடன், மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரும் கைது செய்யப்பட்டு, சிறைக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com