சாலையில் கிடந்த ரூ. 10 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டல் தொழிலாளியை பாராட்டி டிஎஸ்பி பரிசு வழங்கினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம், அத்திமூா் கலியம் காந்தி நகரைச் சோ்ந்தவா் ராமு. இவா் வேலூரிலுள்ள தனியாா் உணவகத்தில் வேலை பாா்க்கிறாா். கடந்த 13-ஆம் தேதி இவா் வேலூா் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சாலையில் பணக்கட்டு கிடந்துள்ளது. அதை எடுத்துப் பாா்த்தபோது அதில் ரூ. 10 ஆயிரம் இருந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தும் யாரும் அந்த அந்த தொகையை வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் அவா், செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தாா். அதனைப் பெற்றுக் கொண்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொறுப்பு) மகேஷ், காவல் ஆய்வாளா் கலைச்செல்வி ஆகியோா் ராமுவைப் பாராட்டி சன்மானம் வழங்கினா்.