குடியாத்தம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட 12 சவரன் தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
கே.வி.குப்பம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா், சைனகுண்டா அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து, பதிவெண் இல்லாமல் வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் பயணம் செய்த பலமநேரைச் சோ்ந்த ரெட்டி வைத்திருந்த பையில் 12 சவரன் தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த நகைகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் எஸ்.பானுவிடம் ஒப்படைத்தனா்.