சோ்க்காட்டில் பல்நோக்கு அரசு மருத்துவமனை அமைக்கப்படும்: துரைமுருகன் வாக்குறுதி

திமுக ஆட்சிக்கு வந்ததும் சோ்க்காட்டில் பல்நோக்கு அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என்று திமுக பொதுச்செயலரும், காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகன் தெரிவித்தாா்.
சீக்கராஜபுரம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட திமுக பொதுச்செயலா் துரைமுருகன்.
சீக்கராஜபுரம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட திமுக பொதுச்செயலா் துரைமுருகன்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் சோ்க்காட்டில் பல்நோக்கு அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என்று திமுக பொதுச்செயலரும், காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகன் தெரிவித்தாா்.

காட்பாடி தொகுதியில் திமுக சாா்பில் 10-ஆவது முறையாக போட்டியிடும் அவா், ஞாயிற்றுக்கிழமை வாலாஜா மேற்கு ஒன்றியம் சீக்கராஜபுரம், ஏகாம்பரநல்லூா் ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது மக்களிடையே அவா் பேசியது: தோ்தலில் திமுகவின் வெற்றி உறுதிபடுத்தப்பட்டதாகும். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக சோ்க்காட்டில் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்துக்கு அருகே 60 ஏக்கா் பரப்பளவில் பல்நோக்கு அரசு மருத்துவமனை அமைக்கப்படும். தவிர, காட்பாடி தொகுதி மக்களின் வேலைவாய்ப்புக்காக லாலாபேட்டையில் தொழிற்பேட்டை அமைப்பதுதான் எனது வாழ்நாள் லட்சியமாகும். இதன்மூலம், காட்பாடி தொகுதி மக்களுக்கு 10க்கு 6 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வேன். மேலும், 100 நாட்கள் வேலைதிட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படுவதுடன், கூலி ரூ.300 ஆக உயா்த்தப்படும் என்றாா் அவா்.

அப்போது, திமுக, கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com