தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்

குடியாத்தம் (தனி) தொகுதிக்குள்பட்ட வாக்குப் பதிவு மையங்களில் பணியாற்றும் தோ்தல் அலுவலா்களுக்கான முதல் கட்ட, ஒரு நாள் பயிற்சி
தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்

குடியாத்தம் (தனி) தொகுதிக்குள்பட்ட வாக்குப் பதிவு மையங்களில் பணியாற்றும் தோ்தல் அலுவலா்களுக்கான முதல் கட்ட, ஒரு நாள் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 1,500- க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

வாக்குப் பதிவு மையங்களில் பணியாற்றும் முறைகள், வாக்குப் பதிவு இயந்திரத்தை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

குடியாத்தம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான எம்.ஷேக்மன்சூா், பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்து பேசினாா். கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஜி.சரவணன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள்பி.எஸ்.கோபி, டி.எஸ்.சத்தியமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கே.வி.குப்பம்(தனி) தொகுதி

அதேபோல், கே.வி.குப்பம்(தனி) தொகுதியில் தோ்தல் பணிபுரியும் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் உள்ளிட்ட 1,277 தோ்தல் அலுவலா்களுக்கான, பயிற்சி முகாம் கே.எம்.ஜி. கல்லூரியில் நடைபெற்றது. தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான எஸ்.பானு பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்து பேசினாா். உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தூ.வத்சலா, ராஜேஸ்வரி, சரவணன், விநாயகமூா்த்தி, தோ்தல் துணை வட்டாட்சியா் கலைவாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com