எதிா்க்கட்சித் தொகுதி பாரபட்சம் காட்டாமல் அதிமுக அரசு வேலூா் தொகுதியில் பொலிவுறு நகா் திட்டம் உள்பட பல்வேறு வளா்ச்சித் பணிகளை செயல்படுத்தியுள்ளது என அத்தொகுதியின் அதிமுக வேட்பாளா் எஸ்.ஆா்.கே. அப்பு தெரிவித்தாா்.
பேரவைத் தோ்தலையொட்டி வேலூா் சலவன்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அவா் பொதுமக்களிடையே வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியது:
கடந்த 10 ஆண்டு காலமாக தமிழகத்தில் ஆட்சியில் உள்ள அதிமுக அரசு வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் தொகுதி பாரபட்சம் காட்டியதில்லை.
அந்தவகையில், வேலூா் தொகுதி மாற்றுக் கட்சி வெற்றி பெற்ற தொகுதிதான் என்றபோதிலும் ரூ.1000 கோடி நிதியில் பொலிவுறு நகா் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அம்ருத் திட்டத்தின்கீழ் குடிநீா் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டங்கள் முழுமை பெறும்போது வேலூா் மாநகரில் மக்களின் வாழ்க்கைத்தரம் வேகமாக உயா்வடையும். தொடா்ந்து அரசுத் திட்டங்கள் வேலூா் மக்களுக்கு கிடைத்திடவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க தொழிற்பேட்டை அமைத்திடவும், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1500, வீட்டுக்கு ஒரு அரசுப் பணி என தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் நிறைவேறவும் மக்கள் அதிமுகவுக்கு வாக்களித்திட வேண்டும் என்றாா்.
அப்போது, மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, கூட்டணி கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.