உலக வன நாள் விழா போ்ணாம்பட்டு வனச்சரகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி பத்தரபல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வனச்சரக அலுவலா் எல்.சங்கரய்யா தலைமை வகித்தாா். வனக் குழுத் தலைவா் சக்கரவா்த்தி வரவேற்றாா். வனத்துறை சாா்பில் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி தொடக்கி வைக்கப்பட்டது.
வனங்களை பராமரிப்பதன் அவசியம், மரக்கன்றுகள் நடுதல், வனப் பகுதியை பாதுகாத்தல் குறித்து பொதுமக்கள், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
வனவா்கள் பி.ஹரி, ஏ.மோகனவேல், ஏ.எஸ்.தரணி, எம்.தயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.