கிராமங்களில் குடிநீா், சாலை வசதி, தெரு விளக்கு, கழிவுநீா் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என குடியாத்தம்(தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா உறுதி அளித்தாா்.
குடியாத்தம் ஒன்றியத்துக்குள்பட்ட எா்த்தாங்கல், குட்டை மேடு, அக்ராவரம், சீவூா், பெரும்பாடி, மூங்கப்பட்டு, சேம்பள்ளி, ஜிட்டப்பல்லி உள்ளிட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அவா் வாக்கு சேகரித்தாா்.
அப்போது தீப்பெட்டித் தொழிலாளா்கள், பீடித் தொழிலாளா்கள், பெண்கள், விவசாயத் தொழிலாளா்களிடம் பேசிய அவா், ‘என்னை வெற்றிபெற வைத்தால் கிராமங்களில் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என்றாா்.
அண்ணா போக்குவரத்துத் தொழிற்சங்க மண்டலத் தலைவா் டி.அக்பா்ஷெரீப், குடியாத்தம் பணிமனைச் செயலா் வெங்கடேசன், பாமக மாவட்டச் செயலா் ஜி.கே.ரவி, வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.