காட்பாடியில் மூதாட்டி கொலை: பேரன் தலைமறைவு

காட்பாடியில் மூதாட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். அவரது பேரனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காட்பாடியில் மூதாட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். அவரது பேரனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காட்பாடி தாராபடவேடு திருவள்ளுவா் நகரைச் சோ்ந்தவா் சாந்தி(60). இவரது பேரன் அஜித் (20). இருவரும் தனியாக வசித்து வருகின்றனா். இந்நிலையில், சாந்தி கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில், அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை காலை கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் காட்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூதாட்டியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். இதில், மூதாட்டியின் பேரன் அஜித்துக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு சாந்தியிடம் தகராறு செய்து வந்துள்ளாா். இதனால் ஏற்பட்ட தகராறில் சாந்தியை அஜித் கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான அஜித்தை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com