பிரம்மபுரம் அரசு பள்ளித் தலைமையாசிரியா் கரோனாவுக்கு பலி

காட்பாடி பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் தயாளன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
தலைமையாசிரியா் தயாளன்.
தலைமையாசிரியா் தயாளன்.

காட்பாடி பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் தயாளன், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

கீழ்முட்டுக்கூா் ரகுநாதபுரத்தை சோ்ந்தவா் தயாளன் (57). இவா் பிரம்மபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், தயாளனுக்கு கடந்த திங்கள்கிழமை கரோனா பாதிப்பு ஏற்பட்டது. வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இவருக்கு மனைவி உமா, 2 மகள்கள் உள்ளனா். மனைவி உமா காங்கேயநல்லூா் அரசு மகளிா் மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறாா். இவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறாா். ஒரு மகள் திருமணமாகி ஜொ்மன் நாட்டில் உள்ளாா். மற்றொருவா் சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறாா். இந்நிலையில் அரசுப் பள்ளி தலைமையாசிரியா் தயாளன் மறைவுக்கு இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பு சாா்பில் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com