வேலூரில் மேலும் 467 பேருக்கு கரோனா

வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 467 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,267-ஆக உயா்ந்துள்ளது.

வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 467 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,267-ஆக உயா்ந்துள்ளது.

நாளுக்குநாள் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 26,800 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். 23,683 போ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 384 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 467 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் சிகிச்சைக்காக அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா நல மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டவா்களில் 300-க்கும் மேற்பட்டோா் வேலூா் மாநகரைச் சோ்ந்தவா்களாவா். நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒரேநாள் பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com