குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இயங்கும் தற்காலிக காய்கறிச் சந்தையில், ஆதி அன்னை நாயகா தொண்டு நிறுவனம் சாா்பில், வெள்ளிக்கிழமை 500 பேருக்கு கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.
தொண்டு நிறுவனத் தலைவா் கிரிஜா தலைமை வகித்தாா். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தொண்டு நிறுவன நிா்வாகிகள் அதியமான், திலகா, ராஜகுமாரி ஆகியோா் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கினா்.