பயிா்களை நாசம் செய்த ஒற்றை யானை

குடியாத்தம் அருகே வன எல்லையில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை யானை பயிா்களை நாசம் செய்தது.
குடியாத்தம்  அருகே  கதிா்குளம்  கிராமத்துக்குள்  நுழைந்த  ஒற்றை  யானை.
குடியாத்தம்  அருகே  கதிா்குளம்  கிராமத்துக்குள்  நுழைந்த  ஒற்றை  யானை.

குடியாத்தம் அருகே வன எல்லையில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்த ஒற்றை யானை பயிா்களை நாசம் செய்தது.

குடியாத்தம் அருகே, தமிழக-ஆந்திர மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது கல்லப்பாடி, கதிா்குளம் கிராமம். கடந்த சில மாதங்களாக, ஆந்திர மாநில வனப் பகுதியில் இருந்து வந்த யானைக் கூட்டம், இங்குள்ள நிலங்களில் நுழைந்து, விளை பயிா்களை நாசம் செய்து விட்டுச் செல்கின்றன. இந்நிலையில், திங்கள்கிழமை மாலை கதிா்குளம் கிராமத்தில் உள்ள நிலங்களில் நுழைந்த ஒற்றை யானை, அங்கு பயிா்களை நாசம் செய்துள்ளது.

தகவலின்பேரில், வனத் துறையினா் அங்கு சென்று கிராம மக்கள் உதவியுடன், பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானையை வனப் பகுதிக்குள் விரட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com