வேலூரில் மேலும் 611 பேருக்கு கரோனா
By DIN | Published On : 26th May 2021 12:00 AM | Last Updated : 26th May 2021 12:00 AM | அ+அ அ- |

கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 611 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,737-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 39,126 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 34,213 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 4,271 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 642 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில், மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 611 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், சுமாா் 400 போ் வேலூா் மாநகராட்சிப் பகுதிகளுக்கு உட்பட்டவா்கள்.