விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் பலி

விரிஞ்சிபுரம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

வேலூா்: விரிஞ்சிபுரம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

வேலூா் மாவட்டம், விரிஞ்சிபுரத்தை அடுத்த வேலங்காடு பனந்தோப்புப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (33). இவா் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த சபரிநாதன் என்பவருடன் பொய்கையில் உள்ள மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை சென்றனா். அங்கிருந்து இரவு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனா்.

விரிஞ்சிபுரம் அணுகுச் சாலையில் வந்தபோது அங்கு கொட்டப்பட்டிருந்த மணலில் ஏறிதில் நிலை தடுமாறி கீழே விழுந்தனா். இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவா்கள் மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சுரேஷ் உயிரிழந்தாா். இது குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com