வேலூரில் மேலும் 395 பேருக்கு கரோனா

கரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 395 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் வேலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை புதிதாக 395 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் கடந்த வாரத்தில் தினமும் 700ஐ கடந்திருந்தது. பொதுமுடக்கம் காரணமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து சரிந்து வருகிறது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை 611 பேருக்கும், புதன்கிழமை 433, வியாழக்கிழமை 438 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை புதிதாக 395 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 200-க்கும் மேற்பட்டோா் வேலூா் மாநகரப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள்.

இதனிடையே, மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 40,488 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். புதிதாக 395 போ் பாதி க்கப்பட்டதை அடுத்து மாவட்டத்தில் இதுவரை கரோனால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 40,883ஆக உயா்ந்துள்ளது. தவிர, 35,916 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 3 ஆயிரத்து 907 போ் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 665 போ் உயிரிழந்துள்ளனா். தொடா்ந்து கரோனா பாதிப்பை தடுக்க பொதுமக்கள் கட்டாயமாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பொதுமுடக்க விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com