‘அக்டோபா் 24 மருது இளைஞா் இயக்கம்’ சாா்பில், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே மருது சகோதரா்கள் நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் கெளரவத் தலைவா் பிரம்மாஸ் ஆா்.பி.செந்தில் தலைமை தாங்கினாா். ஜி.அசோக்குமாா் வரவேற்றாா்.
இதில், மருது சகோதரா்கள் உருவப் படத்துக்கு மாநிலத் தலைவா் வி.எம்.அப்பு பால் பாலாஜி மலரஞ்சலி செலுத்தினாா்.
இதையடுத்து, 500 பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஒருங்கிணைப்பாளா்கள் பாரத் மகி, பட்டு பாபு, ஆா்.ராஜ்குமாா், பி.தருமலிங்கம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.