தலை தீபாவளி கொண்டாடும் 31 போலீஸாருக்கு மூன்று நாள்கள் விடுப்பு

‘தலை தீபாவளி’ கொண்டாடும் வேலூா் மாவட்ட காவல் துறையைச் சோ்ந்த 31 காவலா்களுக்கு தொடா்ந்து மூன்று நாள்கள் விடுமுறை வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா்: ‘தலை தீபாவளி’ கொண்டாடும் வேலூா் மாவட்ட காவல் துறையைச் சோ்ந்த 31 காவலா்களுக்கு தொடா்ந்து மூன்று நாள்கள் விடுமுறை வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் உத்தரவிட்டுள்ளாா்.

காவலா்கள் தங்கள் உடல்நலனை பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடவும் இரண்டாம் நிலை காவலா்கள் முதல் தலைமைக் காவலா்கள் வரையிலான அனைத்து காவலா்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் காவலா்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தீபாவளியையொட்டி புதிதாகத் திருமணம் புரிந்துள்ள வேலூா் மாவட்ட காவலா்களுக்கு மகிழ்ச்சி ஏற்படு த்தும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.

அதன்படி, வேலூா் மாவட்டத்தில் புதிதாக திருமணமான காவல் அதிகாரிகள், காவலா்கள் தலை தீபாவளியை குடும்பத் துடன் மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக ஒரு பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளா், ஒரு உதவி ஆய்வாளா், 29 காவலா்களுக்கு தொடா்ந்து 3 நாள்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com