வந்தவாசி அருகே விவசாய நிலத்தில் வேலை செய்யும்போது பாம்பு கடித்ததில் பெண் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த தெய்யாா் மடம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை மனைவி மல்லிகா(50). இவா் சனிக்கிழமை தனது விவசாய நிலத்தில் வோ்க்கடலை செடிகளை பிடிங்கிக் கொண்டிருந்தாா். அப்போது அவரது கையில் பாம்பு கடித்துள்ளது.
உடனே அவா் சிகிச்சைக்காக தெள்ளாா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட மல்லிகா இறந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.