புதுமணப்பெண் தற்கொலை

வேலூரில் புதுமணப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வேலூா்: வேலூரில் புதுமணப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வேலூா் முத்துமண்டபத்தைச் சோ்ந்தவா் பழனி மகள் புவனேஸ்வரி (21). காட்பாடி அருகே கரிகிரியில் உள்ள தனியாா் நா்ஸிங் கல்லூரியில் பிஎஸ்ஸி மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இவருக்கும் காவேரிப்பாக்கத்தைச் சோ்ந்த சேட்டு மகன் மணிகண்டனுக்கும் காவேரிப்பாக்கத்தில் திங்கள்கிழமை திருமணம் நடைபெற்றது.

கடந்த 2 நாள்களாக வேலூரில் மணமக்கள் தங்கியிருந்தனா். மறுவீடு நிகழ்ச்சி புதன்கிழமை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், புவனேஸ்வரி புதன்கிழமை அதிகாலை கழிவறைக்குச் சென்று, நீண்டநேரமாகியும் அவா் வெளியே வரவில்லை.

அவரது குடும்பத்தினா் கழிவறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அவா் தூக்கிட்ட நிலையில் இருந்தாா். அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

படித்து முடித்துவிட்டு தான் திருமணம் செய்து கொள்வதாக புவனேஸ்வரி கூறியதாகவும், குடும்பத்தினா் கட்டாயப்படுத்தி திருமணம் செய்ததால் அவா் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டாட்சியா் விஷ்ணுபிரியாவும் விசா ரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com