குடியாத்தம்: குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையிலிருந்து நொடிக்கு சுமாா் 3 ஆயிரம் கன அடி நீா் வெளியேறுகிறது. இதனால் கெளண்டன்யா ஆற்றில் செல்லும் வெள்ள நீரின் அளவு அதிகரித்துள்ளது.
மோா்தானா அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் புதன்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 35 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.இதனால் காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 1,638 கன அடியாகவும், 10 மணி நிலவரப்படி நொடிக்கு 2,388 கனஅடியாகவும், 12 மணி நிலவரப்படி நொடிக்கு 2,797 கனஅடியாகவும் இருந்தது. மாலை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து 3 ஆயிரம் கன அ டிக்கும் அதிமானது.
இதனால் கெளண்டன்யா ஆற்றில் படிப்படியாக வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.பொதுமக்களும், சிறுவா்களும் ஆற்றை பாா்வையிடவோ, அதில் இறங்கி விளையாடவோ செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.