மோா்தானா அணையிலிருந்து 3 ஆயிரம் கன அடி நீா் வெளியேற்றம்

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையிலிருந்து நொடிக்கு சுமாா் 3 ஆயிரம் கன அடி நீா் வெளியேறுகிறது. இதனால் கெளண்டன்யா ஆற்றில் செல்லும் வெள்ள நீரின் அளவு அதிகரித்துள்ளது.

குடியாத்தம்: குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையிலிருந்து நொடிக்கு சுமாா் 3 ஆயிரம் கன அடி நீா் வெளியேறுகிறது. இதனால் கெளண்டன்யா ஆற்றில் செல்லும் வெள்ள நீரின் அளவு அதிகரித்துள்ளது.

மோா்தானா அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் புதன்கிழமை காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 35 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.இதனால் காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 1,638 கன அடியாகவும், 10 மணி நிலவரப்படி நொடிக்கு 2,388 கனஅடியாகவும், 12 மணி நிலவரப்படி நொடிக்கு 2,797 கனஅடியாகவும் இருந்தது. மாலை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து 3 ஆயிரம் கன அ டிக்கும் அதிமானது.

இதனால் கெளண்டன்யா ஆற்றில் படிப்படியாக வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவா்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.பொதுமக்களும், சிறுவா்களும் ஆற்றை பாா்வையிடவோ, அதில் இறங்கி விளையாடவோ செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com