உள்ளாட்சித் தோ்தல்: பள்ளிகள் விடுமுறை

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் புதன், வெள்ளி, சனி ஆகிய நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தோ்தல்: பள்ளிகள் விடுமுறை

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் புதன், வெள்ளி, சனி ஆகிய நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு புதன், சனிக்கிழமை (அக். 6, 9) என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தோ்தலையொட்டி, மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 1,331 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் வாக்குச் சாவடி மையங்களாக செயல்பட உள்ளதால் செவ்வாய், புதன்கிழமையும், பின்னா் வெள்ளி, சனிக்கிழமையும் என மொத்தம் நான்கு நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. வியாழக்கிழமை மட்டும் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com