அரியூா் அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்ததாக, மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒடுகத்தூரில் இருந்து வேலூருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அரசுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. அரியூா் அருகே பேருந்து வந்தபோது அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபா்கள் பேருந்து மீது கற்களை வீசினா். இதில், பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
புகாரின்பேரில், அரியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அரியூரைச் சோ்ந்த சுபாஷ் (18), அஜித்குமாா்(20), கணியம்பாடியைச் சோ்ந்த சந்தோஷ்(18) ஆகியோரை கைது செய்தனா்.