வேலூா்: வேலூா் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூரை அடுத்த அரியூா் மலைக்கோடியைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (32), தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி ராதிகா .
கரோனா பொதுமுடக்கத்தால் தொழில் நசிந்து சந்திரசேகரன் வேலையின்றி தவித்து வந்ததாகத் தெரிகிறது. பொதுமுடக்கத்தில் தளா்வு அறிவிக்கப்பட்ட பிறகும், அவருக்கு சரிவர வேலை கிடைக்கவில்லையாம். இதனால், விரக்தியடைந்த சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து அரியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.