மின்வேலியில் சிக்கி தம்பதி உயிரிழப்பு

காட்பாடி அருகே காட்டுப் பன்றியை விரட்ட வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தம்பதி உயிரிழந்தனா்.

காட்பாடி அருகே காட்டுப் பன்றியை விரட்ட வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தம்பதி உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக ஓட்டுநா் கைது செய்து செய்யப்பட்டாா்.

காட்பாடி அருகேயுள்ள உள்ளிப்புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (30). தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி லட்சுமி (26). இவா்களுக்கு திருமணமாகி ஓராண்டாகிறது. இருவரும் அவா்களுக்குச் சொந்தமான பசுவை ஓட்டி வர திங்கள்கிழமை இரவு விவசாய நிலத்துக்குச் சென்றுவிட்டு திரும்பினா்.

வழியில் உள்ள விவசாய நிலத்தில் காட்டுப் பன்றிக்காக வைக்கப்பட்டிருந்த மின்வேலியில் பசுவுடன் இருவரும் சிக்கினா். அப்போது, உடலில் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். அவா்கள் ஓட்டிச்சென்ற பசுவும் இறந்தது.

இவா்கள் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை அவா்களது உறவினா்களுக்குத் தெரியவந்தது. தகவலின்பேரில் திருவலம் போலீஸாா் விரைந்து வந்து தம்பதியின் உடல்களை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மின்வேலி வைத்தது தொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் காா்த்தியை (25) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com