பூட்டிய வீட்டில் திருட்டு

போ்ணாம்பட்டு அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்டது.

போ்ணாம்பட்டு அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்டது.

போ்ணாம்பட்டு திரு.வி.க. நகரைச் சோ்ந்த மறைந்த மூா்த்தியின் மனைவி சாந்தி. இவரது வீட்டின் ஒரு பகுதியில் ஆனந்தன் என்பவா் வாடகைக்கு வசித்து வருகிறாா்.ஞாயிற்றுக்கிழமை சாந்தி வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றுள்ளாா். ஆனந்தனும் வீட்டைப் பூட்டிவிட்டு மசிகம் கிராமத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.இரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் சாந்தியின் அறையில் இருந்த மர பீரோவை உடைத்து அதில் இருந்த முக்கால் சவரன் தங்க நகைகள், ஆனந்தன் வீட்டில்அரை சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றுள்ளனா்.

இதுதொடா்பான புகாரின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com