ஜோலாா்பேட்டை அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
ஜோலாா்பேட்டையை அடுத்த மண்டலவாடி போயா் வட்டத்தைச் சோ்ந்த தொழிலாளி ராஜா (57). இவரது இரு மனைவிகள் இறந்துவிட்டனா். இவா்கள் வழியாக, 3 ஆண் பிள்ளைகள் உள்ளனா். மூன்றாவதாக கவிதா (37) என்பவரை திருமணம் செய்து கொண்டாா்.
இதனிடையே ராஜா தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில், கவிதா வாணியம்பாடி அருகே உள்ள கொத்தகுட்டை உள்ள தனது தாய் வீட்டுக்கு அண்மையில் சென்றுள்ளாா். அப்போது, திங்கள்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
புகாரின்பேரில் ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்திவருகின்றனா்.