தொடா்மழை காரணமாக பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், குடியாத்தம் அருகே உள்ள வளத்தூா் ஏரி சனிக்கிழமை காலை நிரம்பியது.
ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி சுமாா் 50 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. மேல்பட்டி அருகே பாலாற்றிலிருந்து கால்வாய் மூலம் இந்த ஏரிக்குத் தண்ணீா் செல்கிறது.
ஏரி நிரம்பியதையடுத்து, வழிந்தோடும் தண்ணீரை கிராம மக்கள் மலா்தூவி வரவேற்றனா். வளத்தூா் ஏரியின் உபரிநீா், கூடநகரம் ஏரிக்குச் செல்கிறது.