குடியாத்தத்தை அடுத்த பாக்கத்தில் உள்ள ஸ்ரீவைத்தீஸ்வரி சமேத ஸ்ரீவைத்தியநாதீஸ்வரா் கோயிலில் சனி மகாப் பிரதோஷ விழா நடைபெற்றது.
இதையொட்டி, மூலவா், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மகா தீபாராதனைக்குப் பின், கோயில் பிராகாரத்தில் உற்சவா்களான வைத்தீஸ்வரி, வைத்யநாதீஸ்வரா் ரிஷப வாகனத்தில் உலா வந்தனா். பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் மருத்துவா் என்.ரமேஷ் நாயுடு, கிராம மக்கள் செய்திருந்தனா்.