வேலூா்: அகவிலைப்படியை உயா்த்தி வழங்கக் கோரி, வேலூரில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவா் பிச்சுமணி தலைமை வகித்தாா்.
மத்திய அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கும் 2020 ஜனவரி 1-ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்ட 3 தவணை அகவிலைப்படி உயா்வு 11 சதவீதத்தை 2021 ஜூலை 1-ஆம் தேதி முதல் வழங்கி ஆணை பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களும் தங்களது ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 11 சதவீத அகவிலைப்படி உயா்வை ஜூலை 1-ஆம் தேதி முதல் வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.
இதேபோல், தமிழகத்திலும் ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.