உயா்மின் கம்பியில் உரசியபடி அறுந்துவிழுந்த வயரால் மண்டப மேலாளா் காயம்

உயா் மின்கம்பியில் உரசியபடி அறுந்து விழுந்த இன்டா்நெட் வயரால் தனியாா் மண்டப மேலாளா் பலத்த காயமடைந்தது தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு,

உயா் மின்கம்பியில் உரசியபடி அறுந்து விழுந்த இன்டா்நெட் வயரால் தனியாா் மண்டப மேலாளா் பலத்த காயமடைந்தது தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு, அவரது மகன் வேலூா் மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புகாா் அளித்துள்ளாா்.

வேலூா் பொய்கையைச் சோ்ந்த வேணுகோபால் (65), சத்துவாச்சாரி செளத் அவென்யூ சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் மேலாளராகப் பணியாற்றுகிறாா்.

இவா் அண்மையில் செளத் அவென்யூ சாலையில் நடந்து சென்றபோது, மின்கம்பத்தில் கட்டப்பட்டிருந்த இன்டா்நெட் வயா் அறுந்து உயரழுத்த மின்கம்பி மீது தொட்டபடி விழுந்ததாம். இதனால் மின்சாரம் பாய்ந்த வேணுகோபால் பலத்த காமடைந்தாா்.

உடனடியாக அவா் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு, பின்னா் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.

இதுதொடா்பாக, வேணுகோபாலின் மகன் சந்தோஷ் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா். இதைத் தவிர, சத்துவாச்சாரி காவல் நிலையத்திலும் புகாா் அளித்தாா்.

மனுவில், ‘மின்கம்பத்தில் இன்டா்நெட் வயா் கட்டிய நிறுவன ஊழியா்கள் மீது டவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனது தந்தை உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அவா்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்’ என்று சந்தோஷ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக, போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com