எலும்புக்கூடாகப் பெண் சடலம் கண்டெடுப்பு

வள்ளிமலைக் குன்றில் இளம்பெண் சடலம் எலும்புக்கூடாக கிடந்தது.

வேலூா்: வள்ளிமலைக் குன்றில் இளம்பெண் சடலம் எலும்புக்கூடாக கிடந்தது.

வேலூா் மாவட்டத்துக்கு உள்பட்ட வள்ளிமலை அடிவாரத்தில் கிராம உதவி மையம் அருகிலிருந்து சுமாா் 100 அடி உயரத்தில் உள்ள மலைக்குன்றில் 35 வயது மதிக்கத்தக்க பெண் எலும்புக் கூடாக இருந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

தகவலின்பேரில் மேல்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளா் காா்த்தி உள்ளிட்ட போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இறந்துகிடந்த பெண் ஆரஞ்சு நிறச் சேலை, ஜாக்கெட் அணிந்திருந்தாா். அருகே செருப்பு கிடந்தது. தாலி செயினுடன் ஆடைகளும் விலகாமல் இருந்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திலேயே போலீஸாா், வருவாய்த் துறையினா் முன்னிலையில் புதன்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் பெண் கொலை செய்யப்பட்டாரா, தற்கொலை செய்து கொண்டாரா என்ற விவரம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com