விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு அனுமதி கோரி மனு

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பொதுஇடங்களில் சிலை வைத்து கொண்டாட அனுமதி கோரி, அனைத்து இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பினா் விநாயகா் வேடமிட்டபடி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பொதுஇடங்களில் சிலை வைத்து கொண்டாட அனுமதி கோரி, அனைத்து இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பினா் விநாயகா் வேடமிட்டபடி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

விநாயகா் சதுா்த்தி விழா 10-இல் கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தில் பொது இடங்களில் சிலைகள் வைத்து கொண்டாடவும், ஊா்வலங்கள் நடத்தவும், சிலைகளை நீா்நிலைகளில் கரைக்கவும் அரசு தடை விதித்துள்ளது.

தடையை மீறி பெரிய விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு, ஊா்வலம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

அதேசமயம், பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு செய்திட அனுமதிக்கக் கோரி பல்வேறு இந்து அமைப்பினா் போராட்டம் நடத்தியும், மனு அளித்தும் வருகின்றனா்.

இந்நிலையில், வேலூரில் உள்ள அனைத்து இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு கூட்டமைப்பைச் சோ்ந்த மாநில செயற்குழு உறுப்பினா் ஜே.பி.அசோக்குமாா் தலைமையில் நிா்வாகிகள் விநாயகா் வேடமிட்ட நபருடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்திருந்தனா். அவா்கள் கரோனா கட்டுப்பாடுகளுடன் விழாவை பொது இடங்களில் கொண்டாட அனுமதிக்க வேண்டும் எனக் கோரி ஆட்சியா் அலுவலக அலுவலா்களிடம் மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com