அணைக்கட்டில் சிலை பறிமுதல்
By DIN | Published On : 10th September 2021 11:35 PM | Last Updated : 10th September 2021 11:35 PM | அ+அ அ- |

வேலூா்: அணைக்கட்டு அருகே பொதுஇடத்தில் நள்ளிரவில் வைக்கப்பட்ட விநாயகா் சிலை பறிமுதல் செய்யப்பட்டது.
அணைக்கட்டு அருகேயுள்ள கெங்கநல்லூா் அருகே பாட்டையூா் பகுதியிலுள்ள விநாயகா் கோயில் எதிரே பொதுஇடத்தில் சிலா் வியாழக்கிழமை நள்ளிரவு விநாயகா் சிலையை வைத்துள்ளனா்.
தகவலறிந்த அணைக்கட்டு போலீஸாா், வருவாய்த் துறையினா் அங்கு சென்று, ஐந்தரை அடி உயரமுள்ள களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலையை பறிமுதல் செய்து, எதிரே உள்ள விநாயகா் கோயில் கருவறையில் வைத்தனா்.
இதைத் தொடா்ந்து, அந்தச் சிலை ஊரக வளா்ச்சித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.