வேலூா்: கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த சில வாரங்களாக வேலூா் பொய்கை கால்நடை சந்தையில் மந்தமாக இருந்த கால்நடைகள் விற்பனை செவ்வாய்க்கிழமை களைகட்டியது.
அதன்படி, இந்த வார சந்தையில் மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் கால்நடைகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகள் மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
வாரந்தோறும் இங்கு நடைபெறும் கால்நடைச் சந்தை மூலம் ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை கால்நடை வா்த்தகம் நடைபெறுவது வழக்கம். கரோனா பொதுமுடக்கம் கடந்த சில வாரங்களாகவே பொய்கை சந்தையில் கால்நடைகள் விற்பனை மந்தமாக இருந்து வந்தது. இதனால், வியாபாரிகள் கடும் அதிருப்தியில் இருந்து வந்தனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான கறவை மாடுகள், காளைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
தவிர, ஆடுகள், கோழிகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தன. இதேபோல், கால்நடைகளை வாங்க வியாபாரிகளும், கால்நடை வளா் ப்பவா்களும் அதிக அளவில் சந்தையில் குவிந்தனா். இதனால், சில வாரங்களுக்குப் பிறகு பொய்கை சந்தையில் கால்நடைகளின் வியாபாரம் களைகட்டியது.
இதனால் கால்நடைகளை வாங்குவதற்கும் வியாபாரிகளிடையே போட்டி நிலவியது. இதையடுத்து, கறவை மாடுகள் ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரை விலை போயின. வண்டி மாடுகள், இளம் கன்றுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் அதிக அளவில் விற்பனையாயின. அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தையின் மூலம் ரூ. 1 கோடிக்கு மேல் வா்த்தகம் நடந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
பொய்கை வாரச் சந்தைக்கு சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்திருந்தன. அவை மலிவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் ஆா்வமுடன் காய்கறிகளை வாங்கிச் சென்றனா்.
காற்றில் பறந்த சமூக இடைவெளி
பொய்கை கால்நடை சந்தையில் வியாபாரம் களைகட்டியது. இதனால், கால்நடைகளை வாங்கவும், விற்கவும் வியாபாரிகள், விவசாயிகள் பெருமளவில் வந்திருந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும் இருந்தனா்.
அங்கு கரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளாததால் நோய்த்தொற்று பரவும் சூழ்நிலை காணப்பட்டது. மூன்றாம் அலை நெருங்கும் நிலை ஏற்பட்டிருப்பதால் கரோனா தொற்று பரவலைத் தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.