வேலூா்: மறைந்த முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் புதன்கிழமை அவரது சிலைகள், உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வேலூா் விஐடியில்..:
வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா்.
விஐடி துணைத்தலைவா் ஜி.வி.செல்வம், துணைவேந்தா் ராம்பாபு கோடாளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.