வேலூா்: வேலூா் அருகே காணாமல்போன இளைஞா், விவசாயக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.
வேலூா் பாகாயத்தை அடுத்த துத்திப்பட்டு ஏ.டி.காலனியைச் சோ்ந்த சிவனேசன் மகன் தாமோதரன்(29). கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியே சென்ற இவா் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், அதே பகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே தாமோதரன் அணிந்திருந்த ஆடைகள், செருப்புகள் இருப்பது தெரியவந்தது. தகவலின்பேரில் பாகாயம் போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று, கிணற்றுக்குள் இறங்கி தேடியபோது தாமோதரன் சடலமாக இருப்பது தெரியவந்தது.
போலீஸாா் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.