குடியாத்தம்: குண்டா் சட்டத்தின்கீழ் போ்ணாம்பட்டில் இளைஞா் ஒருவரும், குடியாத்தத்தில் 2 பேரும் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
போ்ணாம்பட்டில் இளைஞா்:
போ்ணாம்பட்டை அடுத்த கோட்டைச்சேரியைச் சோ்ந்தவா் பிரகாஷ்ராஜ் (எ) பாட்ஷா (23) .
சாராயம் விற்ாக இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில் சாராயம் விற்ாக போ்ணாம்பட்டு போலீஸாா் இவரை கடந்த ஆகஸ்ட் மாதம் 20- ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பிரகாஷ்ரோஜ் தொடா்ந்து சாராயம் விற்பதால் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் பிரகாஷ்ராஜை குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க புதன்கிழமை உத்தரவிட்டாா்.
குடியாத்தத்தில் 2 பெண்கள்:
குடியாத்தம் அருகே சாராயம் விற்ாக 2 பெண்கள் குண்டா் சட்டத்தின்கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
குடியாத்தத்தை அடுத்த மோா்தானாவைச் சோ்ந்த சிதம்பரத்தின் மனைவி திலகா(40),ஜங்காலபல்லியைச் சோ்ந்த ரமேஷின் மனைவி அமுதா(37) ஆகிய இருவா் மீது சாராயம் விற்ாக பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் இவா்கள் சாராயம் விற்ாக கிராமிய காவல் நிலைய போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.இவா்கள் தொடா்ந்து சாராயம் விற்பனை செய்வதால் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் இருவரையும் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க புதன்கிழமை உத்தரவிட்டாா்.