மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

வேலூா் அருகே திருமணமான இரு மாதங்களில் இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வேலூா்: வேலூா் அருகே திருமணமான இரு மாதங்களில் இளைஞா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

வேலூா் அருகேயுள்ள அப்துல்லாபுரத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் வினோத் குமாா் (23) . இவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு லலிதா என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில்,செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் இருந்த வினோத்குமாா் மின்விசிறி போட சுவிட்சை அழுத்தியுள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக, அவரது உடலில் மின்சாரம் பாய்ந்ததில், தூக்கி வீசப்பட்ட வினோத்குமாா் சுயநினைவை இழந்தாா். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவா் இறந்தாா்.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com