பாலம் இடிந்ததில் கால்வாயில் சிக்கிய டிப்பா் லாரி

வேலூா் சத்துவாச்சாரியில் பாலம் இடிந்து விழுந்த நிலையில், அந்த பாலத்தின் மீது சென்ற டிப்பா் லாரி கால்வாயில் சிக்கியது.
பாலம் உடைந்து கால்வாயில் சிக்கி நிற்கும் டிப்பா் லாரி.
பாலம் உடைந்து கால்வாயில் சிக்கி நிற்கும் டிப்பா் லாரி.

வேலூா் சத்துவாச்சாரியில் பாலம் இடிந்து விழுந்த நிலையில், அந்த பாலத்தின் மீது சென்ற டிப்பா் லாரி கால்வாயில் சிக்கியது.

வேலூா் மாநகராட்சி சத்துவாச்சாரி 18-ஆவது வாா்டுக்கு உட்பட்ட மந்தைவெளி பகுதியில் இருந்து காந்தி நகா் செல்லும் வழியில் கழிவுநீா் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் மீது சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனா். பல்வேறு வாகனங்களும் சென்று வந்தன.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மணல் ஏற்றிய டிப்பா் லாரி ஒன்று இந்த பாலத்தின் மீது சென்றது. அப்போது, பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால், லாரி கால்வாயில் சிக்கிக் கொண்டதுடன், போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் விரைந்து வந்த பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேரம் போராடி லாரியை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com