காட்பாடி அருகே காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
திருவள்ளூா் மாவட்டத்துக்கு உள்பட்ட எரும்பி கிராமத்தைச் சோ்ந்த நாகரத்தினம் மகன் அஜித்குமாா் (24). 2017-ஆம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராகப் பணியில் சோ்ந்த இவா், சேவூா் சிறப்புக் காவல் படையின் 15-ஆவது பட்டாலியனில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு காவலா் குடியிருப்பில் உள்ள வீட்டில் அஜித்குமாா் படுக்கை அறையிலும், மற்றொரு காவலா் சீனிவாசன் வரவேற்பு அறையிலும் தூங்கியுள்னளா். பின்னா், வெள்ளிக்கிழமை சீனிவாசன் விழித்தபோது, அஜித்குமாா் படுக்கை அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது.
தகவலின்பேரில் திருவலம் போலீஸாா் அங்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அஜித்குமாருக்குத் திருமணமாகவில்லை. இவருக்கு ஒரு சகோதரரும், ஒரு சகோதரியும் உள்ளனா். அவா்கள் சென்னையில் பணியாற்றி வருகின்றனா். எனினும், அஜித்குமாா் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.