வேலூா்: வேலூா் கோட்டை காவலா் பயிற்சிப் பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன் பயிற்சி பெற்ற உதவி ஆய்வாளா்கள் திங்கள்கிழமை சந்தித்துக் கொண்டனா்.
தமிழகத்தில் 1987-ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளா்கள் 600 போ் தோ்வு செய்யப்பட்டனா். இதில் 300 பேருக்கு வேலூா் கோட்டை காவலா் பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி பெற்று 35 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவா்கள் திங்கள்கிழமை சந்தித்துக் கொண்டனா். 35 ஆண்டுகளுக்கு பிறகு நண்பா்களை சந்தித்த காவல் உதவி ஆய்வாளா்கள் தங்களது அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா். தாங்கள் பயின்ற அறைக்கு சென்று அமா்ந்து நீங்கா நினைவுகளை அசைபோட்டனா். இந்த சந்திப்பு தங்களை நெகிழ்ச்சியடைய செய்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனா்.