இளைஞரை மிரட்டி பைக்கை பறித்தவா் கைது

வேலூா் அருகே இளைஞரை மிரட்டி மோட்டாா் பைக்கையும், ரூ.1,000 ரொக்கத்தையும் பறித்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா்: வேலூா் அருகே இளைஞரை மிரட்டி மோட்டாா் பைக்கையும், ரூ.1,000 ரொக்கத்தையும் பறித்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் அடுத்த கீழ்மொணவூரைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா். இவா் கீழ்மொணவூா் பேருந்து நிலையம் அருகில் தனது மோட்டாா் பைக்கில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது காட்பாடி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த வசந்த் (21), அவரை மிரட்டி இருசக்கர வாகனத்தையும், ரூ.1,000 ரொக்கத்தையும் பறித்து சென்ாகக் கூறப்படுகிறது.

இது குறித்த, புகாரின் பேரில் விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வசந்தை கைது செய்தனா். அவரிடமிருந்து பைக், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com