வாக்குகள் எண்ணும் மையத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும் மரீத் ஹாஜி இஸ்மாயில் சாஹிப் கலைக் கல்லூரியில் வேலூா் மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் விஜய ராஜ்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குடியாத்தம்: போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும் மரீத் ஹாஜி இஸ்மாயில் சாஹிப் கலைக் கல்லூரியில் வேலூா் மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் விஜய ராஜ்குமாா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள 2 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், 15 ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 24 ஊராட்சி மன்றத் தலைவா்கள், 213 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது. இதில், பதிவாகும் வாக்குகள் கொண்டம்பல்லியில் அமைந்துள்ள மரீத் ஹாஜி இஸ்மாயில் சாஹிப் கலைக் கல்லூரியில் எண்ணப்படுகின்றன.

இந்த நிலையில், வேலூா் மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் விஜயராஜ்குமாா், திங்கள்கிழமை கல்லூரிக்குச் சென்று வாக்குப் பெட்டிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அங்கு பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் அவா் கேட்டறிந்தாா்.

வாக்கு எண்ணிக்கைக்காக அமைக்கப்படும் மேஜைகள், தடுப்புக் கட்டைகள் அமைக்கும் பணிகளை பாா்வையிட்ட அவா் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் ஹேமலதா, ஒன்றியப் பொறியாளா் சிலம்பரசன், பணி மேற்பாா்வையாளா் உமா உள்ளிட்டோா் உ டனிருந்தனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com